இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, February 27, 2012

பனை ஓலையில் பொருள் சேர்க்கலாம்

சுற்றுச்சூழலுக்குக் கேடு என்று தெரிந்தும், பிளாஸ்டிக் உபயோகத்தைக் கைவிடுவதாக இல்லை நாம். சாப்பிடுகிற சிப்ஸில் இருந்து, அணிகிற செருப்பு வரை சகலத்திலும் பிளாஸ்டிக் கலப்பு!

நாகை மாவட்டம் வேட்டைக்கார நெருப்பைச் சேர்ந்த பெரியநாயகி தயாரிக்கிற பொருள்கள் ஒவ்வொன்றும், பிளாஸ்டிக்குக்கு சரியான மாற்று! தொப்பி, தட்டு, கூடை, பை, பூக்கள், பூந்தொட்டி... இப்படி பிளாஸ்டிக்கில் தயாரிக்கக்கூடிய அத்தனை அயிட்டங்களையும், இயற்கைக்கு உகந்த பனை ஓலையில் செய்கிறார் இவர்.

‘‘அஞ்சாவதுக்கு மேல படிக்கலை. கூலி வேலைக்குப் போயிட்டிருந்தேன். மகளிர் சுய உதவிக் குழுவில சேர்ந்தா, சுய தொழில் பண்றதுக்கு பேங்க் கடன் கிடைக்கும்னு சொன்னாங்க. சேர்ந்தேன். பனை ஓலைல பொருள்கள் தயாரிக்கக் கத்துக் கொடுத்தாங்க. கடனும் கிடைச்சது. அஞ்சு வருஷமா இந்தத் தொழில்தான் சோறு போடுது’’ என்கிறார் பெரியநாயகி.பனை ஓலையில் செய்கிற கைவினைப் பொருள்களுக்கு இன்றும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறவர், இந்தக் கலையைக் கற்றுக்கொண்டு, தொழிலாகத் தொடங்க விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?
‘‘பனை ஓலை... ஒரு குருத்து 5 ரூபாய்லேர்ந்து 7 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். ஓலை கிழிக்கிற மெஷின், சாயம், அதைக் கலக்கறதுக்குப் பெரிய பாத்திரம்... அவ்வளவுதான். 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் முதலீடு போதும்.’’

என்னென்ன பொருள்கள்?
ஒரு நாளைக்கு எத்தனை?
‘‘விதம்விதமான கூடை, மாலை, தட்டு, தொப்பி, பை, முறம், பூங்கொத்து... இப்படி பத்துக்கும் மேலான அயிட்டங்கள் பண்ணலாம். ஒரு குருத்துல ஒரு அயிட்டம்தான் பண்ண முடியும். ஒரு நாளைக்கு 4 பீஸ் பண்ணலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘கோயில் திருவிழாக்கள்ல அதிகம் விற்பனையாகும். டூரிஸ்ட் அதிகம் வர்ற ஏரியாக்கள்ல உள்ள கடைகளுக்கு சப்ளை பண்ணலாம். கண்காட்சிகள்ல வைக்கலாம். பாதிக்குப் பாதி லாபம் நிச்சயம்.’’

பயிற்சி?
‘‘அவங்கவங்க வேகத்தையும் திறமையையும் பொறுத்து 15 முதல் 30 நாள் பயிற்சி... ஒருநாளைக்கு 100 ரூபாய் கட்டணம்.’’

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites